உலக செய்திகள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் மழை காரணமாக மண்சரிவு



உத்தரகாண்ட மாநிலத்தின் உத்தரகாசி பகுதியில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

உத்தர்காசி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று(13) காலை உத்தர்காசி பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

பாகிஸ்தான் எயார்லைன்சிற்கு சொந்தமான விமானம் 47 பயணிகளுடன் விபத்திற்குள்ளானது..

wpengine

பிரேசில் அணை உடைந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு…

wpengine

வியன்னாவில் பயங்கரவாத தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு

wpengine