உலக செய்திகள்

உகண்டாவைத் தாக்கிய இபோலா



(FASTNEWS|COLOMBO) – கொங்கோவைத் தொடர்ந்து உகண்டாவிலும் இபோலா வைரஸின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

5 வயதுச் சிறுவன் ஒருவன் இபோலா வைரஸ் தாக்கத்தினால் பீடிக்கப்பட்டிருப்பது, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கண்டறியப்பட்டுள்ளது.

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் கடந்த 10 மாதங்களில் 2000க்கும் அதிகமானோர் இபோலா தாக்கத்திற்குள்ளானதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளதாகவும் மருத்துவ அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை, இபோலா தாக்கத்திற்குள்ளாகிய சிறுவன் உகண்டா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

போயிங் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவி நீக்கம்

wpengine

கொரோனா வைரஸ் – இந்தியாவில் முதல் உயிரிழப்பு

wpengine

ஜப்பான், சீனா, தென்கொரியா உச்சி மாநாடு – 9 ஆம் திகதி ஆரம்பம்…

wpengine