உலக செய்திகள்

ஈரான் – ஈராக் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 400 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு…



ஈரான் – ஈராக் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 400 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு 7,000 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

7.3 புள்ளியாக பதிவான இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்ததுடன் நிலநடுக்கத்தின்போது உண்டான அதிர்வலைகள் மத்திய தரைக்கடல் பகுதியிலும், ஈராக் தலைநகர் பாக்தாத்திலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பிற்குள்ளான பகுதியில் அமைந்துள்ள 2 வைத்தியசாலைகளும் முற்றாக சேதம் அடைந்ததால் நிலநடுக்கத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரானில் 2003 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 26,000 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பனிச்சரிவில் சிக்கி மலையேறு வீரர்கள் 12 பேர் பலி

wpengine

பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சருக்கும் கொரோனா உறுதி

wpengine

சீனாவில் வரலாறு காணாத உறைபனி, மக்களின் இயல்பு நிலை வெகுவாகப் பாதிப்பு..!

wpengine