உள்நாட்டு செய்திகள்

இ. போ. சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…


தமது ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் அரச மற்றும் தனியார் பேரூந்து ஊழியர்களுக்கு இடையில் நேற்று(16) மாலை இடம்பெற்ற மோதலின் போது, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தின் சாரதியை, தனியார் பேரூந்து சாரதி, நடத்துனர் மற்றும் பேரூந்து உரிமையாளர் ஆகியோர் தாக்கியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இலங்கை போக்குவரத்து சபை பேரூந்தின் சாரதி சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

சுமார் 77 இலட்சம் ரூபாய் கொள்ளை சம்பவம் தொடர்பில் 05 சந்தேகநபர்கள் கைது..

wpengine

ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு முறைப்பாடு..!

wpengine

ஜோன்ஸ்டன் FCID முன்னிலையில் ஆஜர்.

wpengine