உள்நாட்டு செய்திகள்

இலவச சீருடை பெறுவதற்கான கூப்பன்கள் நவம்பர் மாதம் விநியோகம்.


அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் சகல மாணவர்களுக்குமான இலவச சீருடை பெறுவதற்கான கூப்பன்கள் நவம்பர் மாதம் முதலாம் வாரத்திலிருந்து விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த வருடத்தைப் போன்று இம்முறை சீருடை கூப்பன்களைப் பெற்றுக் கொள்வதற்கு பெற்றோர்கள் வருகை தரத் தேவையில்லையெனவும், வகுப்பாசிரியர் குறித்த மாணவரின் கையொப்பத்துடன் அதனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அச்சிடப்பட்டுள்ள கூப்பன்களில் மாகாணம், கல்விக் காரியாலயம் மற்றும் குறித்த பாட சாலை என்பனவற்றைக் கண்டறியும் வகையில் இரகசிய இலக்கம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான தெரிவித்துள்ளார்.

Related posts

முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் நீடிப்பு

wpengine

அனர்த்த மரணங்கள் 206 வரை உயர்வு – 170,486 குடும்பங்கள் பாதிப்பு..

wpengine

மக்களின் இயல்பு வாழ்க்கையை ஆரம்பிப்பது தொடர்பில் விஷேட அறிவிப்பு

wpengine