உள்நாட்டு செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமிப்பு.


ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்னே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்நியமனம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

25 வருடத்திற்கும் அதிக காலமாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றிய அவர், தற்போதைய பதவிக்கு நியமிக்கும் போது மேலதிக சொலிஸ்டர் ஜெனரலாக அத்திணைக்களத்தில் பதவி வகித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக இருந்த தில்ருக்ஷி விக்ரமசிங்கவின் பதவி விலகலையடுத்தே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒட்டாவா ஒப்பந்தத்தில் இணைய இலங்கை ஆமோதிப்பு

wpengine

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு

wpengine

கொழும்பு – கே.கே.எஸ் நேரடி ரயில் சேவை 2024 ஜனவரியில் ஆரம்பம்

News Editor