ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இலங்கை மீன்பிடி படகில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்!


யாழ்.,பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கை மீன்பிடி படகொன்றில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளுடன் நான்கு மீனவர்களையும் தாம் கைது செய்ததாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீன்பிடி படகில் கேரளா கஞ்சா இருப்பதாக கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய, பொலிஸார் படகை சுற்றிவளைத்த போது, அதில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று இருந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் எந்த காரணத்திற்காக கொண்டு வரப்பட்டது என்பதை கண்டறிய வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ராபாடா முன்னிலையில் தலைகுனிந்தது ICC… – ஷாகிப் அணியின் “பாம்பு நடனம்” குறித்து ராபாடா அதிரடிக் கேள்வி…

wpengine

இறக்குமதி முழு ஆடை பால்மாக்களின் விலைகளும் அதிகரிப்பு…

wpengine

மஹிந்த 2 கோடி எப்படி செலவு செய்தார்

wpengine