விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் மீது ஆர்வமுடையோருக்கு சிறந்த வாய்ப்பு…



இலங்கை கிரிக்கெட் துறையின் எதிர்கால நலன் கருதி கிரிக்கெட்டுடன் தொடர்புடைய சகல தரப்பினரதும் ஆலோசனையைப் பெற்று வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடைபெறவுள்ள செயலமர்வில் இத்துறையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

அரசியல் நோக்கத்துடன் தாம் இதனை நடத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், இங்கு முன்வைக்கப்படும் ஆலோசனைகளின் அடிப்படையில் அறிக்கை ஒன்று தயாரிக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டின் மேம்பாடு தொடர்பில் வீதியில் கதைப்பதால் எந்தவித பயனும் ஏற்படாது என்றும் விமர்சனங்களை முன்வைப்போர் அதற்கான ஆலோசனைகளை இந்த செயலமர்வில் சமர்ப்பிக்க முடியும் என்றும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் சபை உறுப்பினர்கள், கிரிக்கெட் வீரர்கள், புத்திஜீவிகள் மற்றும் கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள ஊடகவியலாளர்கள் ஆகியோர் இதில் கலந்து கொள்ளலாம் என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மேலும் அழைப்பு விடுத்துள்ளார்.

 

(rizmira)

Related posts

ஜோப்ர ஆச்சர்கு வாய்ப்பு தவறுகிறது

wpengine

என்னால் மூச்சுவிட முடியாது – நானும் கறுப்பினம் என வெறுக்கப்பட்டவன்

wpengine

வீரர்கள் 13 பேர் அடங்கிய நியூசிலாந்து குழாம் அறிவிப்பு…

wpengine

1 comment

Ruban Aug 24, 2017 at 7:06 pm

Super

Comments are closed.