Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது.

வெலிசர கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் பட்டு இருந்த 6 பேரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, இதுவரையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 86 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேஷபந்து தென்னகோன் தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவு

News Editor

அமைச்சரவைக் கூட்டம் இன்று இடம்பெறும்

wpengine

பாராளுமன்றத்தில் முன்னிலையாகுமாறு CID இன் பணிப்பாளருக்கு அழைப்பு..!

wpengine