உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்கு திடீர் பாதுகாப்பு!

இலங்கையில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களின் கோரிக்கையின் அடிப்படையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகங்களில் போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு மற்றும் மாணவிகளுக்கு அதிகரித்துள்ள தொந்தரவுகள் போன்றவற்றால் இந்த பாதுகாப்பு அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Related posts

நிலப் பதிவுகளை நிறைவு செய்யும் ஒரு நாள் சேவை…

wpengine

நுவரெலிய மாவட்டத்திற்கு 04 புதிய பிரதேச சபைகளை அமைக்க அமைச்சரவை அனுமதி…

wpengine

சில பிரதேசங்களுக்கு மின்சாரம் துண்டிப்பு…

wpengine