விளையாட்டு

இலங்கைக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான்



இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலியில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 300 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதில் சில்வா 125 ஓட்டங்களும், சங்கக்கார 50 ஓட்டங்களும் எடுத்தனர். பந்துவீச்சில் வஹாப் ரியாஸ், உல்பிகர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 3வது நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 118 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இதில் ஆசாத் ஷாபிக் 14 ஓட்டங்களுடனும், சர்பிராஷ் அஹ்மத் 15 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்றைய 4வது நாள் ஆட்டத்தில் சர்பிராஷ் மற்றும் ஆசாத் ஷாபிக் இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

சிறப்பாக விளையாடிய சர்பிராஷ் 96 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

மறுமுனையில் விளையாடி ஆசாத் ஷாபிக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 131 ஓட்டங்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 417 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பந்துவீச்சில் டில்ருவான் பெரேரா 4, பிரசாத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

117 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 4ம் நாள் ஆட்ட முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 63 ஓட்டங்கள் எடுத்தது.

கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. சில்வா (5), சங்கக்காரா (18), டில்ருவான் பெரேரா (0) வரிசையாக ஆட்டமிழக்க, கருணரத்ன (50), திரிமன்னே (36) நிதானமாக விளையாடி வருகின்றனர்.

இலங்கை அணி 37 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 113 ஓட்டங்கள் எடுத்துள்ளது

222222222222222222222222

Related posts

இலங்கை கிரிக்கெட் அணியினரின் நடத்தை குறித்து குற்றச்சாட்டுக்களுக்கு விசாரணை

wpengine

குசல் ஜனித் பெரேராவுக்கு பத்து கோடி நஷ்டஈடு

wpengine

மன நிறைவுடன் ஓய்வு பெறுவதாக பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் யூனிஸ் கான் தெரிவிப்பு..

wpengine