உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கு எதிராக எந்தவொரு நாடும் பயண எச்சரிக்கை விடுக்க முடியாது..



இலங்கைக்கு எதிராக எந்தவொரு நாடும் பயண எச்சரிக்கை விடுக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

H1N1 வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக கட்டார் அரசாங்கம் இலங்கைக்கு தமது நாட்டுப் பிரஜைகள் பயணம் செய்வது தொடர்பில் அண்மையில் பயண எச்சரிக்கை விடுத்திருந்தது.

எனினும் குறித்த இந்த பயண எச்சரிக்கையானது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நோய்த் தொற்றுத் தாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்நிலைமையானது அசாதாரண நிலைமை கிடையாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(rizmira)

Related posts

தெற்காசியாவின் மிகப்பெரும் கோடீஸ்வரராக மாறிய மகிந்த ராஜபக்ச!

wpengine

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி இரு வாரங்களுக்குள்

wpengine

சில அழுக்குகளால் தான் நாடு சீரழிகின்றது – சந்திரிக்கா

wpengine