உள்நாட்டு செய்திகள்

இறுதியாகவே மஹிந்த அழைக்கப்படுவார்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

மே மாதம் 9ஆம் திகதி “மைனா கோ கம” மற்றும் “கோட்டா கோ கம” என்பவற்றின் மீது தாக்குதல் நடத்தியமைதொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று (1) மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படவில்லை என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை பொலிஸ் அதிகாரிகள், சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் வாக்குமூலங்களை அளிக்காமை காரணமாக, அவர்கள் இன்றைய தினம் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதால் மஹிந்த ராஜபக்ஸவின் விசாரணைகள் பிற்போடப்பட்டுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்து தரப்பினரினதும் வாக்குமூலங்கள் பெறப்பட்டதும் இறுதியில் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அரசியல்வாதிகளை அழைக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சசி வீரவங்ச தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானம்…

wpengine

இன்றைய வானிலை

wpengine

சம்பள உயர்வில் 2500 ரூபாவுடன் மூன்று மாத நிலுவையும் வழங்கப்படும் – ரஞ்சித் மத்துமபண்டார

wpengine