உள்நாட்டு செய்திகள்வணிகம்

இறக்குமதி அரிசி 98 ரூபாவுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி இன்று (29) முதல் ஒரு கிலோகிராம் 98 ரூபாவுக்கு சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக சதொச நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சுங்கத்தின் சோதனை நடவடிக்கைகளின் பின்னர் இதுவரையில் நாட்டரிசி அடங்கிய 09 கொள்கலன்கள் தமது நிறுவனத்திற்கு கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனூடாக நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக சதொச தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மைத்திரி – மஹிந்த ராஜபக்ஷ ஒன்றிணைவது உறுதி.. – பிரதி அமைச்சர் நிஷாந்த..

wpengine

எதிர்வரும் 20ம் திகதி சில ரயில்கள் இரத்து

wpengine

கிழக்கு மாகாண முதலமைச்சர் மீது முறைப்பாடு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் – பாதுகாப்பு செயலாளர்

wpengine