உலக செய்திகள்

இர்மா புயல் காரணமாக புளோரிடாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு..



அட்லாண்டிக் கடலில் உருவாகிய ‘இர்மா’ புயல் பாதிப்பால் புளோரிடா மாகாணத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

வடக்கு அட்லாண்டிக் கடலில் உருவான ‘இர்மா’ புயல் கரீபியன் தீவுகளை கடந்து அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புயலின் தாக்கத்திலிருந்து கரீபியன் தீவுகள் இன்னும் மீளாத நிலையில் நேற்று(12) வரை அங்கு 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

புளோரிடா மாகாணத்தின் பல்வேறு நகரங்களில் மின்சாரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் சுமார் 6 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

Related posts

வேகமாக பரவும் எலிக் காய்ச்சலினால் இதுவரையில் 74 பேர் பலி…

wpengine

ஈரானில் சுமார் 90 சிறுவர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளதாக ஐ,நா அறிக்கை

wpengine

பிரான்ஸ் ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிட்ட இளைஞர் கைது..

wpengine