உள்நாட்டு செய்திகள்

இருபது : இருபத்தொன்றன்று அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இருபதாவது திருத்த சட்டமூலம் பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும்போது, சர்வஜன வாக்கெடுப்பைக் கோரும் திருத்தங்கள் உள்ளடக்கப்பட மாட்டாது என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் 21ஆம் திகதி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் நீதி அமைச்சு கூறியுள்ளது.

மேலும், 20ஆவது திருத்த சட்ட மூலம் தொடர்பில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் ஏற்கனவே உயர்நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த திருத்தங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதானால், பாராளுமன்ற உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுடன் அதனை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இளைஞனின் உயிரை பறித்த லொறி

News Editor

பேருந்துகளில் அதிக கட்டணங்கள் அறவிட்டால் அறிவிக்கலாம்…

wpengine

JVP குறித்த திவயின செய்திக்கு எதிராக சட்ட நடவடிக்கை – டில்வின்

wpengine