உள்நாட்டு செய்திகள்

இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 8000 மாணவர்கள்



(FASTNEWS| COLOMBO) – இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 8000 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதோடு, அதற்கான நேர்முகப்பரீட்சை தற்போது இடம்பெறுவதாகவும் கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

ஏனைய வருடங்களிலும் பார்க்க மாணவர்களின் எண்ணிக்கை இம்முறை இரண்டு மடங்காக அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தக் கல்லூரிகளில் 4200 பேர் பயிற்சிகளைப் பூர்த்தி செய்துள்ளனர். இவர்கள் பிரதேச செயலக மட்டத்தில் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்னாயக்க மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை..

wpengine

காலிமுகத்திடல் போராட்டகளத்தில் தவறிப்போன ரி-56 மகசீனுடன் ஒருவர் கைது!

wpengine

இலங்கைக்கான சுற்றுலா தடையை நீக்கியது சீனா

wpengine