உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் கொட்டாஞ்சேனை அளுத்மாவத்தை வீதியூடனான போக்குவரத்து தற்காலிகமாக மூடப்படும்…



கொட்டாஞ்சேனை அளுத்மாவத்தை பகுதியின் ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பகேவத்தை சந்தி வரையான ஒரு பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று(06) முதல் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை, இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் குறித்த வீதியூடான போக்குவரத்துக்கு தற்காலிகமாக மட்டுப்படுத்தப்படவுள்ளமையால் குறித்த வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளும் பொதுமக்களும் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்துப் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நீர்க் குழாய் சீர்திருத்த பணிகள் காரணமாக இவ்வீதியூடான போக்குவரத்துக்கு தற்காலிகமாக மட்டுப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மத்திய வங்கி பிணைமுறிகள் விவகாரம் குறித்து நீதிமன்ற விசாரணை ஊடாக தீர்வு – ஜனாதிபதி.

wpengine

மத்திய கிழக்கிலிருந்து மேலும் சிலர் நாடு திரும்பினர்

wpengine

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்கள்

wpengine