உள்நாட்டு செய்திகள்

இன்று பல மாகாணங்களிலும் மழை…



தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை தீவிரம் பெறுவதால் நாட்டின் பல பாகங்களில் எதிர்வரும் சில தினங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்று மத்திய , சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Related posts

வெள்ள அனர்த்தத்தில் பாதிப்புற்றோருக்கு சதொச மூலம் இலவச அத்தியாவசிய பொருட்கள்..

wpengine

ஓய்வு பெற்ற மின்சார சபை ஊழியர்களை பணிக்குத் திரும்புமாறு அழைப்பு..

wpengine

யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து வாயில்களையும் மூடி போராட்டம்…

wpengine