Top Story 1உள்நாட்டு செய்திகள்

இன்று தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இதுவரையில் தீர்க்கப்படாத தங்களது சம்பள பிரச்சினை தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய நடவடிக்கை குறித்து, இன்று(25) கூடி தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாக, ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஆசிரியர் – அதிபர் சம்பள பிரச்சினை தொடர்பான அமைச்சரவையின் தீர்மானம், அடுத்தவாரம் அறிவிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும நேற்று தெரிவித்திருந்தார்.

சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறுகோரி, ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கை இன்று 45 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

இந்நிலையில், இன்று ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் கூடி தங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து அறிவிக்க உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு எதிராக 600 மில்லியன் ரூபா முறைகேடு வழக்குத்தாக்கல்

wpengine

சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

wpengine

களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வு

wpengine