உள்நாட்டு செய்திகள்

இனங்களுக்கு இடையே முறுகலை ஏற்படுத்தும் வகையில் முகநூலில் பதிவினை பதிவிட்டவர் கைது..



(FASTNEWS| COLOMBO) – இனங்களுக்கு இடையே முறுகலை ஏற்படுத்தும் வகையில், ‘எமக்கும் சந்தர்ப்பம் வரும். கடவுள் எம்மைப் பாத்துக் கொள்வார்’ என தமிழ் மொழியில் முகநூலில் பதிவொன்றினை பதிவிட்ட இளைஞர் ஒருவர் இறக்குவானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இறக்குவானை- ஒரேன்ஜ்பீல்ட் தோட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இந்த பதிவு தொடர்பில் நபர் ஒருவர் பாதுகாப்பு பிரிவினருக்கு வழங்கிய தகவலுக்கமையவே, இவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை…

wpengine

பல்கலைக்கழக நடவடிக்கைகள் குறித்து விசேட அறிவிப்பு

wpengine

டெக்னிகல் சந்தியில் போக்குவரத்து நெரிசல்

wpengine