உலக செய்திகள்

இந்தோனேசியா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தோனேசியா) – இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் மஜினே நகரில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 7 பேர் மரணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 என பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் 637 பேர் காயமடைந்துள்ளதுடன், 60 வீடுகள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இன்று அதிகாலை காலை 1 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றதாக மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும், நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

Related posts

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லியில் பிரமாண்டமான யோகா நிகழ்வு

wpengine

கடும் வெப்பம் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

wpengine

பேரூந்து மீது லொரி மோதிய விபத்தில் 20 பேர் பலி

wpengine