உள்நாட்டு செய்திகள்

மஹிந்த, அமைச்சரவைக்கு எதிரான இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு…


மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவை இரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை மீண்டும் எதிர்வரும் ஜனவரி 16, 17, 18 ஆம் திகதிகளில் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ஈவா வனசுந்தர, புவனேக்க அலுவிஹாரே மற்றும் விஜித் மலல்கொட அகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Related posts

குடிநீர் கட்டணத்தை உயர்த்த யோசனை..!

wpengine

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கு இம்மாதம் 24ம் திகதிக்கு…

wpengine

வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பம்

wpengine