உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மஹேல புதிய அவதாரமெடுக்கிறார்



இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்தன வர்ணனையாளராக புதிய அவதாரம் எடுக்கவுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.

இந்தத் தொடரில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் மஹேல ஜெயவர்தன வர்ணனையாளராக செயற்படவுள்ளார்.

ஏற்கனவே ஸ்கை ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர்கள் குழுவில் முன்னாள் இங்கிலாந்து அணித்தலைவர்களான இயன் பொத்தம், டேவிட் கொவர், நாஸர் ஹுசைன், அர்தர்டன் மற்றும் பொப் வில்லிஸ் ஆகியோர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வர்ணனையாளர்கள் குழுவோடு மஹேல ஜெயவர்தனவும் இணையவுள்ளார்.

Related posts

ஶ்ரீலங்கன் விமான சேவையின் 4 விமான சேவைகள் இரத்து…

wpengine

ஐ.நா அறிக்கைக்கு ஐந்து நாட்களில் இலங்கை பதில் அறிக்கை

wpengine

போலி ஆவணங்களைத் தயாரித்த மூன்று பேர் கைது

Azeem Kilabdeen