Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஆறு நாடுகளுக்கு இலங்கை வர தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆறு நாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

தென் ஆபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோத்தோ மற்றும் எசுவாத்தினி ஆகிய 6 நாடுகளிலிருந்தே இலங்கைக்கு வருகைத் தர இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14 நாட்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிடுகின்றது.

இதேவேளை, குறித்த நாடுகளிலிருந்து எவரேனும் வருகை தந்திருக்கும் பட்சத்தில், அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் ஜனாதிபதி ரணில் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார்

Azeem Kilabdeen

பகிடிவதைக்கு எதிரான சட்டம் உரியமுறையில் நடைமுறைப்படுத்தப்படும்…

wpengine

பொலிஸ் உத்தியோகத்தர்கள் 14 பேருக்கு இடமாற்றம்

wpengine