உள்நாட்டு செய்திகள்

ஆயுதங்களுடன் மாளிகாவத்தையில் டிபென்டர் வாகனம் கைது



மாளிகாவத்தை இன்ரம் சந்திக்கருகில் சந்தேகத்திற்கு இடமான டிபென்டர் வாகனத்துடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பிற்குள் வரும் வாகனங்கள் இன்று அதிகாலை மாளிகாவத்தை பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன் போதே சந்தேகத்திற்கு இடமான குறித்த டிபென்டர் வாகனத்தில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் சில மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்னும் சந்தேகநபர்கள் ராகம, அங்குருவாதொட்ட, நாகொல்லாகம, காலி, மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் தொடர்பில் மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(riz)

Related posts

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் பதற்றம்

wpengine

பேரூந்து குடைசாய்ந்து விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு…

wpengine

போட்டியில் கலந்து கொள்ள பிரான்ஸ் சென்ற இலங்கை முப்படை வீரர்கள் ஏழுபேர், கடவுச்சீட்டுடன் தப்பி ஓட்டம்!

wpengine