உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பொலிஸ் பயிற்சி மையம் மீது தற்கொலைப்படை தாக்குதலில்15 பேர் பலி…



ஆப்கானிஸ்தானில் பொலிஸ் பயிற்சி மையம் மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படைகள் மற்றும் பொலிசாரை குறிவைத்து தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாக்தியா மாகாண தலைநகரான கார்டிசில் உள்ள பொலிஸ் பயிற்சி மையத்தை குறிவைத்து தீவிரவாதிகள் இன்று(17) தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாக்தியா பொலிஸ் தலைமையகம் அருகே நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

எய்ட்ஸ் நோய் – ஒரு வருடத்தில் 140 பேர் பாதிப்பு

wpengine

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு…

wpengine

ஒன்றன் பின் ஒன்றாக யானைகள் பாறைகளில் வீழ்ந்து உயிரிழப்பு! [VIDEO]

wpengine