உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவன்ட்கார்ட் தொலைபேசி உரையாடலும் லஞ்சமுன், லஞ்ச ஆணைக்குழுவிடம் ரஞ்சன் முறைப்பாடு



அவன்ட்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி, அமைச்சர் ராஜித சேனாரத்னவின் செயலாளரும் வரையறுக்கப்பட்ட அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் தலைவருமான சயூரு சமரசுந்தர இடையில் நடந்ததாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் அடங்கிய இரண்டு இறுவட்டுக்களை(Audio) பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இலஞ்ச ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளார்.

லஞ்சம் கொடுக்க முயற்சித்தமை தொடர்பில் அவன்ட்கார்ட் நிறுவனத்தின் தலைவருக்கு எதிராக முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இன்னும், லஞ்சப் பணத்தை பெற்றுக்கொண்டமை தொடர்பாக அமைச்சர் ராஜிதவின் செயலாளருக்கு எதிராகவும் முறைப்பாடு செய்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் தொலைபேசி உரையாடல் தொடர்பான குறித்த செய்திகளை இணையத்தளங்கள் நேற்று வெளியிட்டிருந்தன. அமைச்சர் சார்பில் தான் 5 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொண்டதாக அமைச்சரின் செயலாளர் சயூரு சமரசுந்தர இந்த தொலைபேசி உரையாடலில் கூறியுள்ளார்.

மேற்படி தொலைபேசி உரையாடல் இணையத்தளங்களில் வெளியானதை தொடர்ந்தும் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் முகநூலிலும் மற்றுமொரு தொலைபேசி உரையாடல் வெளியிடப்பட்டது.

பணத்தை பெற்றுக்கொள்ள அமைச்சர் மறுத்து விட்டதாக அமைச்சரின் செயலாளர், அவன்ட்கார்ட் நிறுவனத்தின் தலைவரிடம் கூறுவது அதில் உள்ளடங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

குறித்த இந்த இரண்டு தொலைபேசி உரையாடல்களையும் இலஞ்ச ஆணைக்குழுவிடம் கையளித்த பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, குற்றச்சாட்டு சம்பந்தமாக இருதரப்பினரிடம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

உரையாடல்கள் மூலம் பணம் பரிமாறிக்கொள்ளப்பட்டது உறுதியாகியுள்ளது. எதற்காக இந்த பணம் பரிமாறப்பட்டது என்பது குறித்து விசாரிப்பது அவசியம்.

மேலும், அமைச்சரின் செயலாளர் இலஞ்ச பணத்தை பெற்றுக் கொண்டுள்ளமையும் குற்றம். அவன்ட்கார்ட் நிறுவனம் இலஞ்சம் வழங்க முயற்சித்துள்ளமையும் குற்றம் எனவும் ரஞ்சன் ராமாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தொலைபேசி உரையாடல்களுக்கு மேலதிகமாக ரஞ்சன் ராமநாயக்க, 5 மில்லியன் ரூபாவுக்கான காசோலை ஒன்றின் பிரதியையும் ஊடகங்களுக்கு வழங்கினார்.

எவ்வாறாயினும் அவன்ட்கார்ட் நிறுவனம் தனக்கு பல சந்தர்ப்பங்களில் இலஞ்சம் வழங்க முயற்சித்தாக அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடக சந்திப்புகளின் போது கூறியிருந்தார்.

எனினும் இதனை மறுத்த அவன்ட்கார்ட் நிறுவனம் சாட்சியமிருந்தால் முன்வைக்குமாறு கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

avant-gardcheque

Related posts

இந்த நேரத்தில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்குப் பொருத்தமான சூழல் ஒன்று இல்லை – ஜனாதிபதி!

News Editor

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களால் பாரிய ஆர்ப்பாட்டம்

wpengine

தினேஷ் குணவர்தன இந்தியா விஜயம்

wpengine