உலக செய்திகள்

அல்பேனியாவில் நிலநடுக்கம் -150 பேர் காயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அல்பேனியா நாட்டில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 150 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அல்பேனியா தலைநகர் டிரானாவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் பூமிக்கடியில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது.

அல்பேனிய கடற்கரை பகுதிகளில் உணரப்பட்ட இந்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின. டர்ரெஸ் எனும் நகரில் உணவகம் ஒன்று முற்றிலும் இடிந்து விழுந்து நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை திரும்பப் பெறுகிறது கனடா…

wpengine

புதிய வகை கொரோனா பிரான்ஸிலும் அடையாளம்

wpengine

குவைத்தில் ஐ. எஸ். தீவிரவாதிகள் ஐவர் கைது

wpengine