Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) ஒத்திவைத்து உத்தரவிட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியதுடன், குறித்த வழக்கு அழைக்கப்பட்ட போது, ​​அநுராதபுரம் பொலிஸார் சந்தேக நபரை “அர்ச்சுனா லோச்சன்” என்று பெயரிட்டனர்.

ஆனால் சாரதி அனுமதிப் பத்திரத்தில் அவரது பெயர் இராமநாதன் அர்ச்சுனா என குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே, சரியான சந்தேகநபரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த வழக்கு எதிர்வரும் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

காலி – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு…

wpengine

போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

wpengine

எதிர்வரும் 5ஆம் திகதி வடமாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை…

wpengine