உள்நாட்டு செய்திகள்

அருங்காட்சியகங்களுக்கு செல்ல முன்பதிவு செய்ய வேண்டும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய அருங்காட்சியகங்களை ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, போது விடுமுறை தினம் அல்லாத ஏனைய தினங்களில் காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 4.00 மணிவரை, அருங்காட்சியகங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரே தடவையில் அதிகபட்சமாக 15 பார்வையாளர்கள் எனும் வகையில், 30 நிமிடங்களுக்கு ஒருமுறை பார்வையாளர் ஒருவரை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அருங்காட்சியகங்களுக்குச் செல்வதற்கு முன்னர் தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி, நேரம், திகதியை முன்பதிவு செய்ய வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களை, http://www.museum.gov.lk/ என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

Related posts

நாட்டிலுள்ள செல்வந்தர்களிடம் அரசு கோரிக்கை

wpengine

எதிர்கட்சித் தலைவர் – ஜேவிபி இடையே சந்திப்பு – தீர்மானம் பிற்பாடு..

wpengine

பல்கலைக்கழகங்களை மீள திறப்பது குறித்து தீர்மானம்

wpengine