உள்நாட்டு செய்திகள்

அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்களுக்கு மஹிந்த அறிவுறுத்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள், மாகாண சபை நிறுவனங்கள், உள்ளுராட்சி மன்றங்கள் என்பனவற்றில் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து வாக்குகளை கோருவதற்கும் துண்டுபிரசுரங்களை விநியோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது உரிய நிறுவன தலைவர்களின் பொறுப்பாகும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 19ஆம் திகதி வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆர்.பிரேமதாச மைதான நுழைவாயில் 4.30 மணியில் இருந்து திறந்து விடப்படும்…

wpengine

07 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில்.

wpengine

இந்தோனேசியாவில் இருந்து நாடு திரும்பிய 110 இலங்கையர்கள்

wpengine