உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச நிறுவனங்கள் ஐந்தின் பிரதானிகள் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று ஆஜர்



(FASTNEWS | COLOMBO) – அரச நிறுவனங்கள் ஐந்தின் பிரதானிகளை இன்று(27) காலை 10 மணிக்கு கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெடிக்கலோ கெம்பஸ் தனியார் நிறுவனம் தொடர்பில் குறித்த அறிக்கையை தயாரித்தல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்தார்.

முதலீட்டு சபை,இலங்கை வங்கி, மத்திய வங்கி,நிறுவனங்களை பதிவு செய்யும் பதிவாளர் அலுவலகம் ,உயர் கல்வியமைச்சு முதலான நிறுவனங்களை இது தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்கள் தொடர்பில் விசாரிக்கதற்கு இவ்வாறு அழைப்புவிடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

3.6 மில்லியன் ரூபாவை குறித்த இந்த நிறுவனத்திற்கு மட்டுமல்லாது இதனுடன் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்களில் தொடர்புபடுத்தியிருப்பதால் இது தொடர்பில் சகலரதும் விடயங்களை கேட்டறிந்து கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக ஆஷூ மாரசிங்க மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

தாக்குதல் தொடர்பிலான 03வது நாள் விவாதம் இன்று(10)..

wpengine

அவசர தேவைகளின் நிமித்தம் மின்சாரத்தை கொள்வனவு செய்ய அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு…

wpengine

பிரியங்கவுக்கு எதிரான தீர்ப்பு இரத்து

wpengine