உள்நாட்டு செய்திகள்

அரச சேவை தொழில் திணைக்கள அதிகாரிகளின் சங்கம் தொழிற்சங்க போராட்டத்தில்..



தொழிலாளர் திணைக்கள அதிகாரிகளின் இடைக்கால கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டமைக்கு ஒரு மாதத்தினுள் தீர்வு பெற்று தராத பட்சத்திலேலே தாம் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க போவதாக அரச சேவை தொழில் திணைக்கள அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று(30) முதல் தொழில் திணைக்கள அதிகாரிகளின் இடைக்கால கொடுப்பனவு நூற்றுக்கு 50% ஆக புதிய சுற்று நிரூபத்தின் அடிப்படையில் குறைக்கப்பட்டிருந்தது.

இந்த வருடத்திற்கான நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாமை காரணத்தினால் குறித்த இந்த கொடுப்பனவு குறைக்கப்படுவதாக தொழில் அமைச்சு குறிப்பிட்டிருந்தது.

எவ்வாறாயினும் இடைக்கால கொடுப்பனவு குறைக்கப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எதிர்வரும் காலங்களில் தொழிற்சங்க போராட்டங்கள் பல முன்னெடுக்கப்பட உள்ளதாக சங்கத்தின தலைவர் ஐ.சீ கமகே மேலும் தெரிவித்தார்.

 

(rizmira)

Related posts

இலங்கையில் முதன்முறையாக திரவ இயற்கை எரிவாயு அனல்மின் நிலையம்..

wpengine

தேர்தலின் நிமித்தம் இடைநிறுத்தப்பட்டிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை மீண்டும் நாளை ஆரம்பம்

wpengine

சதுரவின் கருத்து அரசின் நிலைப்பாடல்ல – விஜயதாச சாடல்

wpengine