உள்நாட்டு செய்திகள்

அரச அலுவலகங்களின் அலுவலக நேரமாற்றம் இன்று(18) முதல் அமுலுக்கு…



கொழும்பு நகரத்தில் நிலவும் கடும் வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் நடடிக்கையின் முதற்கட்ட நடவடிக்கையாக பத்தரமுல்ல பிரதேசத்தில் காணப்படும் அரச அலுவலகங்களின் அலுவலக நேரமாற்றம் இன்று(18) முதல் நடைமுறைக்கு வருகின்றது.

குறித்த இந்த நேரமாற்றம் தொடர்பில் அரச நிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று(18) தொடக்கம் மூன்று மாதங்களுக்கு நெகிழ்வான அலுவலக நேரம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

அதன்படி, காலை 7.30 – 9.15 வரையிலான எந்த காலப்பகுதியிலும் அரச பணியாளர்கள் பணிக்கு வரமுடியும்.

அவர்கள் வருகை தரும் நேரத்தின் அடிப்படையில் சேவை நேரங்களில் கணிப்பிடப்பட்டு பிற்பகல் 3.15 – 5.30 வரையிலான காலப்பகுதியில் பணியை நிறைவு செய்ய முடியும்.

எவ்வாறாயினும் காலை 9.15 தொடக்கம் பிற்பகல் 3.15 வரையில் பணியாளர்கள் அனைவரும் அலுவலகத்தில் இருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

ஜீவன் தொண்டமானை பரிந்துரைக்கும் ஆவணம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு

wpengine

கோட்டாவுக்கு அழுத்தம் கொடுத்து வெளியேற்றிய தொழிற் சங்கத்தினர் தற்போது போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் – மஹிந்தானந்த

News Editor

இராஜங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவின் மகன் கைது..

wpengine