சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் அரசியல் அமைப்பு பேரவையின் முதலாவது அமர்வு நாளை(05) நாடாளுமன்ற தொகுதியில் கூடவுள்ளது.
2017ஆம் ஆண்டு இறுதிக்கு முன்னர் இலங்கையில் புதிய அரசியல் அமைப்பு கொண்டு வரப்படுவதற்கான ஒழுங்குகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதன்போது தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான அதிகார பரவலாக்கல்களுக்கும் வழியேற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.