Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று சபையில் அறிவித்தார்.

அதற்கமைய, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 121 இன் ஏற்பாடுகளுக்கமையவும் இன்று பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கமையவும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக  பந்துல குணவர்தன, விதுர விக்ரமநாயக்க,  நளின் பர்னாந்து,  அநுர பிரியதர்ஷன யாபா,  விஜித ஹேரத்,  துமிந்த திசாநாயக்க,  செஹான் சேமசிங்க, பிரமித்த பண்டார தென்னகோன்,  ஹர்ஷ த சில்வா,  இந்திக அனுருத்த ஹேரத்,  சிறிபால கமலத்,  சீதா அரம்பேபொல,  சுரேன் ராகவன்,  எம்.ஏ. சுமந்திரன், ) கவிந்த  ஜயவர்தன,  முஜிபுர் ரஹுமான்,  ஹர்ஷண ராஜகருணா,  சமிந்த விஜேசிறி,  இசுரு தொடன்கொட,  அனுப பஸ்குவல் மற்றும்  ரஞ்சித் பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார

Related posts

பேஸ்லைன் வாகனவிபத்தில் இளைஞன் பலி

wpengine

சீரற்ற காலநிலை தொடரும்…

wpengine

வர்தா புயல் காரணமாக இலங்கையர்கள் 500 பேரளவு பாதிப்பு..

wpengine