Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசாங்கம் கலைய வேண்டும்: அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நாட்டின் நிலைமை மாற ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என  ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடியால் மாணவர்களுக்கு பாடசாலை செல்ல முடியவில்லை. மக்களுக்கு ஒரு நகரில் இருந்து இன்னுமொரு நகருக்கு செல்ல முடியவில்லை.

கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலுக்குச் செல்ல முடியாதுள்ளது, நோயாளிகளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வாகனம் இல்லை.

நாடு இதனால் மேலும் வீழ்ச்சியடையும் எனவே, இந்த அரசு வீடு செல்ல வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Related posts

அவன்ட் கார்ட் ஆயுதக் கப்பல் குறித்த விசாரணை அறிக்கைகள் தயார் நிலையில்

wpengine

புறாத்தீவு தேசிய பூங்காவிற்கு தற்காலிகமாக பூட்டு…

wpengine

யாழ்.பல்கலைக்கழக மோதல் – காலவரையறை இன்றி விஞ்ஞான பீடம் மூடப்பட்டது

wpengine