உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அமைச்சர் விஜயதாசவுக்கு பதவி விலக 17ம் திகதி வரை கால அவகாசம்..



நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரிய யோசனை இம்மாதம் (17)ம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு அவர் பதவி விலகாதவிடத்து (17)ம் திகதிக்கு பின்னர் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றில் முன்வைக்கப்படும் எனவும் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தொகுதி உறுப்பினர்களினால் விஜயதாச ராஜபக்ஷவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்த நிலையில், குறித்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

பாதுகாப்பு பட்டியுடனான விசேட முச்சக்கரவண்டி பாவனைக்கு..

wpengine

முதலாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பம்

wpengine

மூன்று ஒழுங்குவிதிகள் மற்றும் கட்டளைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

Azeem Kilabdeen