உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வாழும் சூழலை ஏற்படுத்தியவர் மஹிந்த ராஜபக்ஷவே..



(FASTNEWS| COLOMBO)- மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தாம் வெள்ளைவான் கடத்தல் சம்பவங்களுடன் ஈடுபடவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று(02) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எனினும் யுத்தத்தில் வெற்றி கொள்ளும் விதமாகவும் அதனை முடிவுக்கு கொண்டு வரும் விதமாகவும் தாம் நுண்ணறிவான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவித்த அவர் மக்களை பாதிக்கும் எந்தவொரு செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான செயற்பாடுகள் மூலமாக 30 வருட காலமாக நாட்டில் இடம்பெற்ற போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வாழும் சூழலை ஏற்படுத்தியுள்ளார் எனவும் கோத்தாபய ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

Related posts

நீதி கோரி சரத் பொன்சேகா நீதிமன்றத்திற்கு…

wpengine

“தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்வது சமூகத்தை நேரடியாகப் பாதிக்கின்றது” பொலன்னறுவை, கலெல்லயில் அமைச்சர் ரிஷாட்!

wpengine

இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

wpengine