உள்நாட்டு செய்திகள்

பாரிய அபிவிருத்தி திட்டங்களை இடைநிறுத்த தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரை அனைத்து பாரிய அபிவிருத்தி திட்டங்களையும் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது,

பாரிய அரச மற்றும் பொதுக்கட்டடங்கள்,வீதிகளுக்கான இதன் மூலம் இடைநிறுத்தப்படவுள்ளதாக திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவிக்கின்றார்.

இந்த தீர்மானம் குறித்து அமைச்சர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் நிர்மாணப் பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ள அபிவிருத்திப் பணிகள் இடைநிறுத்தப்படாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

நாளை முதல் 10 அலுவலக ரயில்கள் சேவையில்

wpengine

கோட்டாபயவுக்கு 90 நாட்கள் விசா வழங்கவுள்ள தாய்லாந்து!

wpengine

ரஷ்ய உலக பொருளாதார பேரவையில் (டாவோஸ்) பங்கேற்க இலங்கைக்கு மீண்டும் அழைப்பு!

wpengine