உள்நாட்டு செய்திகள்

அனர்த்த நிலையை கருத்தில் கொண்டு சகல மருத்துவ அதிகாரிகளிடமும் GMOA கோரிக்கை..



நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையை கருத்தில் கொண்டு விடுமுறையில் இருக்கும் சகல மருத்துவ அதிகாரிகளும் சேவைக்கு சமூகமளிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தமது உறுப்பினர்களிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளனர்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் விசேட மருத்துவ முகாம்களை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் நலிந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக நூற்றுக்கும் அதிகமான அரச மருத்துவ அதிகாரிகள், சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஏற்கனவே களுத்துறை மாவட்டத்தில் சில மருத்துவ குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், மாத்தறை, ஹம்பந்தோட்டை மற்றும் காலி மாவட்டங்களுக்கு குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் நலிந்த ஹேரத் மேலும் தெரிவித்திருந்தார்.

 

(rizmira)

Related posts

தெமட்டகொட அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் தீ..

wpengine

அம்பியூலன்ஸில் வந்து ஆஜனார் சிசிலியா

wpengine

எரிபொருள் விலைகளை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம்.

wpengine