உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அநுராதபுரம் சதொச களஞ்சியசாலையின் முகாமையாளர் வெளிநாடு செல்ல தடை !



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

அநுராதபுரம் சதொச களஞ்சியசாலையின் முகாமையாளர் வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் பிரதான நீதிவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி தநாலக ஜயசூரிய ஆகியோர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

பெருந்தொகையான நாட்டு மற்றும் சம்பா அரிசியை மோசடி செய்ததாக அநுராதபுரம் சதொச களஞ்சியசாலையின் முகாமையாளர் மீது குற்றஞ் சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே அவர் வெளிநாடு செல்வதற்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பாரிய அரிசி மோசடி தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் 11ஆம் இலக்க வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் நிரோஷனி ஹேவா பத்திரன ஆகியோருக்கு பிரதம நீதிவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

இருபதுக்கு – 20 மேற்கிந்திய அணிக்கான குழாம் அறிவிப்பு..

wpengine

சீரற்ற காலநிலை காரணமாக மின் விநியோகத்தை சீர் செய்வதிலும் பாதிப்பு…

wpengine

அரச தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நியமனம்…

wpengine