உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அத்தியாவசிய ஓளடதங்களின் விலை மீண்டும் அதிகரிப்பு…



கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் குறைக்கப்பட்ட அத்தியாவசிய ஓளடதங்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதுதொடர்பான வர்த்தாமனி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்தினவினால் கையெழுத்திடப்பட்டு, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைய 48 ஓளடதங்களின் விலைகள் குறைக்கபட்டிருந்தன.

அதன்போது, அவற்றுக்கான சில்லறை விலை அறிவிக்கப்பட்டதுடன், அவற்றை உரிய விலையில் விற்பனை செய்யாத வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 14 ஆம் திகதி சுகாதார அமைச்சரினால் கையெழுத்திடப்பட்ட, வர்த்தமானிக்கு அமைய குறித்த 48 அத்தியாவசிய ஓளடதங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

wpengine

இதுவரை 785 கடற்படையினர் குணமடைந்தனர்

wpengine

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி: IMF இடமிருந்து 1.17 பில்லியன் டொலர் நிதியுதவி

wpengine