உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அதிவலு கொண்ட மின்சாரக் கம்பி அறுந்து வீழ்ந்ததில் இருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மஹவெல பிரதேசத்தில் அதிவலு கொண்ட மின்சாரக் கம்பி அறுந்து வீழ்ந்ததில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் மஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹஉல்பத, ஹதமுணகால பிரதேசத்தில் இன்று (06)  முற்பகல் 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் செலகம மற்றும் மஹவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23 மற்றும் 27 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரதேசத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் மீது 33 ஆயிரம் வோல்ட் சக்தி வாய்ந்த மின்கம்பி அறுந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லொறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அருகிலிருந்த பலா மரத்தின் கிளையொன்று, உடைந்து மின் கம்பி மீது வீழ்ந்ததையடுத்து குறித்த மின் கம்பி அறுந்து லொறி மீது வீழ்ந்துள்ளது.

அதன்போது லொறியினுள் மூவர் இருந்துள்ளதாகவும் அவர்களில் ஒருவர் லொறியில் இருந்து வெளியில் பாய்ந்து உயிர்தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கமால் குணரத்ன நியமனம்

wpengine

குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு மீளவும் திறப்பு.. பொதுமக்கள் அவதானம்..

wpengine

கர்ப்பிணியொருவர் பிணையாளரானால் வட்டியுடன் உடனடிக் கடன் – குறித்த அமைப்பு தொடர்பில் அவதானம்..

wpengine