Top Story 3உள்நாட்டு செய்திகள்

அடுத்த வாரம் முதல் நாளாந்தம் நீர் வெட்டு அமுல்



(ஃபாஸ்ட் நியூஸ் | காலி ) – நிலவும் வறட்சியுடனான வானிலை காரணமாக, காலி மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான நீர்விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொதுமுகாமையாளர் R.H. ருவனிஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காலி நகரில் அடுத்த வாரம் முதல் நாளாந்தம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொதுமுகாமையாளர் R.H. ருவனிஸ் கூறியுள்ளார்.

இதனால் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

வறட்சியுடனான வானிலை தொடர்ச்சியாக நிலவும் பட்சத்தில், அநுராதபுரம், கந்தளாய், பண்டாரவளை ஆகிய பகுதிகளுக்கான நீர்விநியோகமும் மட்டுப்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

நாட்டில் 40,000 இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள்..!

wpengine

அரசமைப்பு தொடர்பில் ஆராய அரசமைப்புக் குழு

wpengine

மக்களின் பிரச்சினைகளை ஆராய பிரதமரால் நான்கு குழுக்கள் நியமனம்!

wpengine