உள்நாட்டு செய்திகள்

அடுத்த சில நாட்களில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும்…


அடுத்த சில நாட்களில் (குறிப்பாக நவம்பர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில்) நாடு முழுவதும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 10-20 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

Related posts

இரவோடு இரவாக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி நீக்கம்..!

wpengine

ஜனாதிபதி தேர்தல் – ஐந்து தமிழ் தேசிய கட்சிகள் இணக்கம்

wpengine

போர்ட் சிட்டி நிர்மாணம் தாமதித்தால் இலங்கைக்கே நஷ்டம் – மஹிந்த

wpengine