உள்நாட்டு செய்திகள்

அஜித் பிரசன்னவின் உண்ணாவிரதம் நிறைவுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு முன்னால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

அவர் நேற்றிரவு(02) இந்த உணவு தவிர்ப்பினை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரியொருவர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் குறித்த பெண் அதிகாரி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க வேண்டும் என கோரி, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன உணவு தவிர்ப்பில் ஈடுப்பட்டு வந்தார்.

இந்நிலையில், அதுரலியே ரதன தேரர் மற்றும் ஓய்வு பெற்ற ரியர் அத்மிரல் சரத் வீரசேகர விடுத்த கோரிக்கைக்கு அமைய அவர் தனது உண்ணாவிரத போராட்டத்தினை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மேதினத்திற்கு 5,532 பஸ்களில் 2,21,000 பேர் கொழும்பு வரவுள்ளதாக NPP தெரிவிப்பு

Azeem Kilabdeen

சிறுவர்கள் இடையே அம்மை நோய்க்கு ஒத்த வைரஸ் பரவல்

wpengine

அருட்தந்தை சிறில் காமினி CID’யில்

wpengine