உள்நாட்டு செய்திகள்

அகில இலங்கை செயற்குழு விசேட கூட்டம் எதிர்வரும் மாதம்…



ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் அகில இலங்கை செயற்குழு என்பனவற்றின் விசேட கூட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் பங்கு கொள்ளுமாறு, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு கடித மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 06 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

wpengine

சஜித்தின் பிரசார கூட்டத்தில் ரணில்

wpengine

ஊரடங்குச் சட்டம் தளர்வு

wpengine